சூறதுர் ரூம் தொடர்...

30 வது அத்தியாயமாக இடம்பெற்றுள்ள இந்த சூறா (சூறா அர் ரூம்),60 வசனங்களை உள்ளடக்கியுள்ளது. அவற்றை உள்ளடக்கத்தின் அடிப்படையில் வசனக் கூட்டங்களாக நோக்குவோம்.
1-7 ( ஆயத்துகள்) : விசுவாசிகளுக்கே வெற்றி நிச்சயம் என அல்லாஹ் வழங்கியிருக்கும் வாக்கு.
8-10 : சிந்தனை செய்யும் படி விடுக்கப்படும் அழைப்பு
11- 32 : பிரபஞ்ச அத்தாட்சிகளை குறிப்பிட்டு பின்வரும் 03 அம்சங்களை விளக்குகிறது.
- மீள எழுப்பப்படும் நாள் பற்றி வாக்களிப்பதோடு எழுப்பப்படும் நாட்களில் மனிதர்களின் நிலைமை எப்படியிருக்கும் என்பது பற்றிய விளக்கம் (11-16)
- அல்லாஹ்வின் தூய்மை, அவன் புகழ் ஆகியவற்றை பிரபஞ்ச அத்தாட்சிகளுடன் விளக்குகிறது ( 17-29)
- இஸ்லாம் மனித இயல்பில் நிலைகொண்டுள்ள மார்க்கம் என்றும் அல்லாஹ் ஒருவனே எனும் ஓரிறைக் கொள்கையை நினைவூட்டி குழுக்களாக, கொள்கைகளாக பிரிந்துவிட வேண்டாம் என்று மனிதர்களுக்கு உபதேசம் வழங்குகிறது. (30-32)
33 - 37 : இன்ப துன்பத்தின் போது மனித இயல்பு எப்படியிருக்கிறது என்பதை கவலையோடு சித்தரிக்கிறது.
38-39 : உரிமைகளை வழங்குமாறு உற்சாகம் வழங்குவதோடு வட்டிக்கொடுப்பனவு முறையையும் தடுத்து உபதேசிக்கிறது.
40-42 : ஓரிறைக்கொள்கையே யதார்த்தமானது என்பதை சில ஆதாரங்களுடன் மீண்டும் வலியுறுத்துகிறது.அத்தோடு மனித செயற்பாடுகள் ஏற்படுத்தும் விளைவுகளை சுட்டிக் காட்டுகிறது.
இப் பகுதியில், பொருளாதார ரீதியிலான சிந்தனை இறை நம்பிக்கையோடு சேர்த்து விளக்கப்பட்டுள்ளமை எமது கவனத்தைப் பெரிதும் ஈர்க்கிறது.
43 - 51 : அல்லாஹ் வழங்கிய மார்க்க வழியில் வாழுமாறு மனித இனத்துக்கு அழைப்புவிடுப்பதுடன் அல்லாஹ் ஒருவனே இறைவன் என்பதை விளக்குகின்றன. அத்தோடு, பாவிகளின் இறுதி முடிவு பற்றியும் இவ் ஆயத்துகள் விளக்குகின்றன.
52 - 54 : மனிதர்கள் மீது செல்வாக்குச் செலுத்த நபியவர்களுக்கிருக்கும் உயர்ந்தபட்ச அளவு பற்றியும் படைப்புகள் மீது அல்லாஹ்வுக்கிருக்கும் அதிகாரம், சக்தி பற்றியும் குறிப்பிடுகின்றன.
58 - 60 : அல்லாஹ் வழங்கும் அத்தாட்சிகள் குறித்தான நிராகரிப்பாளர்களின் நிலைப்பாடு பற்றி விளக்குவதோடு இறை பாதையில் வரும் சோதனைகளின் போது பொறுமையாக இருக்கும் படி நபியவர்களுக்கு உபதேசம் வழங்கி சூறா நிறைவு பெறுகிறது.
وآخر دعوانا أن الحمد لله رب العالمين..

Comments

Popular posts from this blog

சூறதுர் ரூம்